பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் கரையோரம் அமைந்திருந்த 100 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில் ஆற்றுக்குள் சரிந்து அடித்து செல்லப்பட்டது. இடிந்து விழும் இக்கோயிலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், ஆற்று வெள்ளத்தின் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, கங்கை கரையோர பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பான முகாம்களுக்கு அதிகாரிகள் உடனடியாக மாற்றி வருகின்றனர்.
