திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் கருட பஞ்சமி உற்சவம் நேற்று (ஆக.17) கோலாகலமாக நடைபெற்றது. புதுமண தம்பதிகளும் பெண்களும் நல்வாழ்வு வேண்டி சிறப்பு வழிபாடுகள் செய்த நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா’ கோஷமிட்டு சாமியை தரிசித்தனர். இரவு 7 மணி முதல் 9 மணி வரை உற்சவர் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
