திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பகுதிகளில் முதலை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஆபத்தை உணராமல் முதலையை பார்ப்பதற்காக கூட்டமாக கூடி நிற்கின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் முதலை நடமாட்டம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். காலையில் ஊருக்குள் முதலை கண்டதால் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
