Skip to content
Home » வறுமை…..ஒடிசாவில் பெண் குழந்தை ரூ.800க்கு விற்பனை…. பழங்குடி பெண் கைது

வறுமை…..ஒடிசாவில் பெண் குழந்தை ரூ.800க்கு விற்பனை…. பழங்குடி பெண் கைது

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு. இவரது கணவர் முசு தமிழ்நாட்டில் பணிபுரிகிறார். கராமி முர்முவுக்கு சமீபத்தில் 2-வது பெண்குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது என்று நினைத்த பெண் கராமி முர்மு, குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு அதை ரூ.800-க்கு விற்றுவிட்டார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த கணவர் முசு, புதிதாக பிறந்த 2-வது குழந்தை பற்றி கேட்டுள்ளார். அப்போது, குழந்தை இறந்துவிட்டதாக கராமி முர்மு பொய் கூறியுள்ளார். அதனால் கணவர் முசு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், புதிதாக பிறந்த பெண்குழந்தையை ரூ.800-க்கு ஒரு குழந்தையில்லாத தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக குழந்தையின் தாய் கராமி முர்மு, அதை வாங்கிய தம்பதி, அதற்கு ஏற்பாடு செய்த நபர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!