Skip to content
Home » குடும்ப பிரச்னை…..இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

குடும்ப பிரச்னை…..இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இ. வெள்ளனேரில் குடும்ப பிரச்சனை காரணமாக மனமுடைந்த இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லால்குடி அருகே இ.வெள்ளனூரைச் சேர்ந்தவர் 28 வயதான ஹேமப்பிரியா. இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து திருச்சி பீமநகரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்துவந்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக இளம்பெண் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரவு இ.வெள்ளனூரில் உள்ள வீட்டில் தனக்குத்தானே உடலில் தீ வைத்து கொண்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!