திருச்சி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த பாண்டியன் என்பவர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆடு திருடிய வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணை நிறைவு பெற்று, குற்றவாளி பாண்டியனுக்கு 3 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆடு திருடிய குற்றவாளிக்கு சிறை தண்டனை!- திருச்சி கோர்ட்
