Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அடையாறில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

சென்னை அடையாறில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுகார்பேட்டையில் இருந்து பல்லாவரத்தில் உள்ள நிறுவனத்துக்கு கொண்டு சென்றபோது பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், ஏப், 23ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், சென்னை அடையாறில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சென்னை சாஸ்திரி நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!