Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு…

  • by Senthil

தமிழகத்தில் மீண்டும் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 45 ரூபாய் உயர்ந்து 6,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 360 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக 53 ஆயிரம் என்ற அளவில் இருந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் 54,000 எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்வை சந்தித்துள்ளது. நேற்று 86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 2 ரூபாய் உயர்ந்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 86 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 88 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!