Skip to content
Home » உள்ளாடைக்குள் மறைத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்….

உள்ளாடைக்குள் மறைத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்….

  • by Senthil

சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை போட்டதில் அவர் ஜட்டிக்குள் 285 கிராம் தங்க கட்டி  மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இது 24 காரட் தங்கம். இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 40ஆயிரத்து 197ஆகும். இது தொடர்பாக அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!