Skip to content
Home » குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

பெண் போலீசார் குறித்து  சவுக்கு சங்கர், அவதூறு கருத்துக்களை  வெளியிட்டு யூ டியூப் பதிவு வெளியிட்டு இருந்தார்.  இது தொடர்பாக பெண் போலீசார் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அதனை ஏற்று  அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர்  குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தரப்பில்  சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பாலாஜி ,சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது. அவர்கள்  உத்தரவில் கூறி இருப்பதாவது:  சவுக்கு சங்கர், முதல்வரை ஒருமையில் பேசி உள்ளார். இதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில்  அவர் எப்படி நடந்து கொள்வார், என்னவெல்லாம் செய்யமாட்டார்  என  பட்டியலிலிட்டு உத்தரவாத  மனு தாக்கல்  செய்ய வேண்டும். அதன் பிறகு நாளை இந்த மனு குறித்து விசாரிக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!