Skip to content

மின்விளக்கு டவர் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி…கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி வயது 57 அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். டிக்கெட் வழங்குவதில் முறையீடு செய்து விட்டதாக கூறி கடந்த மே மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து மூன்று மாதம் காலம் முடிந்து முடிந்து இன்று கரூர்,திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம் கிளை) அலுவலகத்தில் சென்று என்னை எதற்காக சஸ்பெண்ட் செய்தீர்கள் என்றும் அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும் என்று தனது மேலதிகாரியிடம் கூறியுள்ளார்.

ஆதாரத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த நடத்துனர் போக்குவரத்து கழக அலுவலகத்தில் உள்ள சுமார் 30 அடி மின்விளக்கு டவர் மேலே ஏறி நியாய வேண்டும் எனக் கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் உதவியுடன் நடத்துனர் பழனிச்சாமியை பத்திரமாக மீட்டனர் பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பாதுகாவலர்கள் மற்றும் அதிகாரிகள் செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது .

error: Content is protected !!