சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி ஜங்ஷன் வழியாக கீழகல்கண்டார்கோட்டை வரை செல்லும் அரசு பேருந்து ஒத்தக்கடை பகுதியில் செல்லும் பொழுது நடுவழியிலேயே பழுது ஏற்பட்டு சாலையிலேயே நின்றதால் பயணிகள் அவதி.
பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், நடுவலியிலேயே அரசு பேருந்து நின்றதால் பரபரப்பான ஒத்தக்கடை சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
திருச்சி மாநகரில் இயங்கும் அரசு பேருந்துகள் குறிப்பிட்ட காலத்தை விட இயக்கப்படுவதாலும், தரமான பேருந்துகள் இயக்கப்படாததாலும் அரசு பேருந்துகள் ஆங்காங்கே நடுவழியில் நிற்பதும் பயணிகள் பல்வேறு அசவுகரியங்களை சந்தித்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது, போக்குவரத்து துறை நிர்வாகம் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக விட வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது