Skip to content
Home » 12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

  • by Senthil

தமிழக கவர்னர் ரவி,  அவ்வப்போது மாணவர்களை அழைத்து வைத்து தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை விஷம பிரசாரம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.  அதன்படி நேற்றும் அவர் தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்துக்கும் எதிரான பல கருத்துக்களை வெளியிட்டார். இது தமிழக மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  கவர்னரின் பேச்சுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரவியின் இந்த போக்கை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரும் 12ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.ரவியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாக மர்மமானதாக இருக்கின்றன என்று அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் பிரதிநிதியாக தன்னை காட்டிக்கொள்ள துடிக்கிறார். குறிப்பாக சனாதானம், வர்ணாசிரமத்திற்கு ஆதரவாக பொது மேடைகளில் கவர்னர் பேசியவை அபத்தமானவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்ற மாண்பை குலைக்கும் நடவடிக்கைகளை கவர்னர் நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!