Skip to content
Home » அரசின் தையல் மிஷின் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி… திருச்சியில் புகார்..

அரசின் தையல் மிஷின் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி… திருச்சியில் புகார்..

திருச்சி, உறையூர் கீழ செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி வித்தியா (  30). இவரிடம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அணுகி உங்களுக்கு கலெக்டர் அலுவலகம் மூலம் அரசின் தையல் இயந்திரம் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். அதற்காக 6000 ரூபாய் பணமும் பெற்றுள்ளார். அவர் தையல் இயந்திரம் பெற்றுக் கொடுக்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட வித்தியா உறையூர் போலீஸ் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!