Skip to content
Home » சொத்துக்காக பாட்டியை கொலை செய்த பேரன்….

சொத்துக்காக பாட்டியை கொலை செய்த பேரன்….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள எஸ்.சந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகாத்தாள் (60). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், குழந்தைகள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது அவரது உறவினர்கள் சிலர் வந்து அவரை பார்த்துச் செல்வார்கள். மேலும் நாகாத்தாளுக்கு 1.5 செண்ட்டில் நிலம் உள்ளதால், அவருக்கு பின் அந்த நிலத்தை உறவினர்கள் சிலர் சொந்தமாக்கி கொள்ள விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்த நாகாத்தாளை பார்க்க நேற்று மாலை அவரது உறவு வழி பேரனான பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான மணிகண்டன் நாகாத்தாளுக்கு பிறகு அவர் இருக்கும் இடத்தின் பட்டாவை தனக்கு கொடுக்க வேண்டும் என அடிக்கடி கேட்டுவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை மது போதையில் வந்த மணிகண்டன், பாட்டியிடம் உடல்நலக்குறைவால் ஏதாவது ஆனால், எப்படி பட்டாவை வாங்க முடியும், 1.5 செண்ட் நிலத்தின் பட்டாவை இப்போதே கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் நாகாத்தாள் பட்டாவை கொடுக்க மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்

இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரை பொள்ளாச்சி தாலுக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 1.5 செண்ட் நிலத்திற்காக உறவு வழி பாட்டியை கொன்ற பேரனால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!