Skip to content
Home » குரூப் போட்டோ எடுத்தபோது பாஜ., எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….

குரூப் போட்டோ எடுத்தபோது பாஜ., எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….

  • by Senthil

பழைய பாராளுமன்றத்திற்கு விடை கொடுத்துவிட்டு இன்று முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு முன்பு மக்களவை, மேல்-சபை எம்.பி.க்கள் பழைய பாராளுமன்றத்தின் உள் முற்றத்தில் ஒன்றாக குரூப் புகைப்படம் எடுத்து கொண்டனர். பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட 750 எம்.பி.க்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது பா.ஜனதா மேல்-சபை எம்.பி. நர்ஹரி அமீன் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு மற்ற உறுப்பினர்கள் உதவினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் சகஜ நிலைக்கு திரும்பி புகைப்பட அமர்வில் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!