Skip to content
Home » கிண்டி பல்நோக்கு மருத்துவமனை…. 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

கிண்டி பல்நோக்கு மருத்துவமனை…. 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது.  திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவா் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது. இதனால், வேறு ஒரு தேதியில் குடியரசு தலைவர் திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினே திறந்து வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!