Skip to content
Home » பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது…

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் பாப்பாக்குடி காமராஜர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடைய மகன் பாலகுமார் (36) என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமையை காதலிப்பதாகவும் திருமண செய்து கொள்வதாகவும் கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்து தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 21.11.2023 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, 28.11.2023 அன்று கைது செய்யப்பட்டு, ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் குருபாலப்பர் கோவில் தெற்கு தெருவில் வசிக்கும் இளங்கோவன் மகன் விஜய்(29) என்பவர் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்து தொடர்பாக, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 25.11 .2023 பதிவு செய்யப்பட்டு, 26.11.2023 அன்று கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இவ்விரு வழக்குகளிலும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி, நடவடிக்கை எடுக்க கோரி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி பரிந்துரையின் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, பாலகுமார் மற்றும் விஜய் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பித்தார். அதன்படி இருவரும் திருச்சி மத்திய சிறை அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!