திருச்சி குற்றப் பிரிவு டிஎஸ்பிஆல்பர்ட்(53), சில நாட்களுக்கு முன் திருவெறும்பூரை சேர்ந்த ராதா என்ற பெண்ணிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது வழக்கில் ராதாவின் பெயரை சேர்க்காமல் விட்டு விட வேண்டும் என்றால் தனக்கு ரூ.1 லட்சம் தரும்படி கேட்டார். இது குறித்து ராதா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் டிஎஸ்பி ஆல்பர்ட்டை கைது செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆல்பர்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் டிஎஸ்பி ஆல்பர்ட்டுக்கு உதவியாக இருந்ததாக இப்போது பெண் ஏட்டு ஹேமா கேத்தரினையும் எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.