Skip to content
Home » ஹெல்த் வாக்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்….

ஹெல்த் வாக்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்….

தமிழ்நாடு முதல்வர் ஆணையின்படி மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்   காணொலி காட்சி வாயிலாக ”நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் 8 கி. சுகாதார நடைபயிற்சியினை தொடங்கி வைத்தார்.   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி ,  சுற்றுச்சூழல் மற்று காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கிலிருந்து சுகாதார நடைபயிற்சியினை கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா அவர்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.நமச்சிவாய (அறந்தாங்கி), மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!