Skip to content

சென்னையில் கொட்டித் தீா்த்த கனமழை

  • by Authour

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில்  நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை  கொட்டித் தீர்த்தது.அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூவிருந்தவல்லி, மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, திருமழிசை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

அதிகபட்சமாக அம்பத்தூரில் 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வானகரம், மணலியில்  தலா 12 சென்டி மீட்டரும், அண்ணாநகரில் 11 சென்டி மீட்டரும் மழை பெய்தது.  ஆனால் இன்று காலை  இயல்பு நிலை காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!