Skip to content
Home » மக்களுக்கு உதவி செய்யுங்கள்…. மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு.. விஜய் அன்பு கட்டளை….

மக்களுக்கு உதவி செய்யுங்கள்…. மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு.. விஜய் அன்பு கட்டளை….

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும், போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைதளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், #கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!