நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க தமிழக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. 21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மத்திய அரசுடன் இணைந்து தொடர் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அமைச்சர்கள் குழு ஈடுபட்டுள்ளது.
