அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடந்த யானைக் கூட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்து எச்சரித்ததால், அதிவேக ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 90 யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்தன. யானை வழித்தடங்களில் வனத்துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
