Skip to content
Home » இன்று ஹோலி பண்டிகை…. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

இன்று ஹோலி பண்டிகை…. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  சென்னை  சவுகார்பேட்டை  உள்பட பல இடங்களில் இன்று  வடநாட்டு இளைஞர்கள், பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி  பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.  இது போல திருச்சியிலும்  வடநாட்டினர் வசிக்கும் பகுதிகளில் ஹோலிபண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு,பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:

“நாட்டு மக்களுக்கு ஹோலி திருநாள் வாழ்த்துக்கள். இந்த நல்லிணக்க திருவிழா இந்தியாவின் விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாகும். இந்த வண்ணத் திருவிழா, நாட்டு மக்களிடையே அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை மேலும் வலுப்படுத்தி, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வர வேண்டும் என நல்வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார்.
அதேபோல பிரதமர் மோடி  தொிவித்துள்ள வாழ்த்தில், ” அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்” இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!