சிவகாசியில் காகித அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாண்டியம்மாள், வழக்கம்போல் இன்று காலை வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலை கட்டிங் இயந்திரத்தில் சிக்கி, அவர் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார். இந்த விபத்தில் அவரது கை துண்டாகி, அதிகளவில் ரத்தம் வெளியேறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
