சென்னையில் “கிளாண்டர்ஸ்” நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட குதிரை உயிரிழந்துள்ளது. சென்னையில் நூற்றுக்கணக்கான குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்று பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் பரவும் ஆபத்தான நோய் “கிளாண்டர்ஸ்” தொற்று என மருத்துவத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
