Skip to content
Home » திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

  • by Senthil

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை மற்றும் ஶ்ரீரங்கம் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட 350 பயனாளிகளுக்கு மான்ய தொகையாக ரூ. 7.35 கோடி மதிப்பீட்டில் பணி ஆணைகள் மற்றும் செல்வ விநாயகர் கோவில் தெரு, மற்றும் இ.பி. ரோடு பகுதியை சேர்ந்த 25

பயனாளிகளுக்கு கிரையப் பத்திரம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி இன்று  திருச்சி மாநகராட்சியில் நடந்தது.  மேயர் மு.அன்பழகன்,  ஆணையர் வைத்திநாதன் ஆகியோர்  பணி ஆணைகள் மற்றும் கிரையப்பத்திரங்களை  வழங்கினா். அப்போது  உதவி நிர்வாக பொறியாளர் பி.முருகானந்தமும் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!