காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசை உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4.536 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவு மிக குறைவானது. விநாடிக்கு 3500 கனஅடி நீர் திறந்துவிட உத்தரவு இருக்கும்போது வெறும் 550 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் 77.537 டிஎம்சி நீர் உள்ளது, நீரை திறந்து விட கர்நாடகாவுக்கு சிக்கல் இல்லை.
