மராட்டிய மாநிலம் நாக்பூரில் வீட்டில் சமைப்பதற்கு பதிலாக நடன வகுப்பிற்கு சென்ற மனைவியை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில், யாமினி கிருஷ்ண லால் யாதவ் (38) உயிரிழந்தார். கணவர் கிருஷ்ண லால் யாதவ், மதுபோதையில் 2 குழந்தைகளின் முன்னிலையில் யாமினியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த யாமினி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கணவர் கைது செய்யப்பட்டார்.
