சரத்குமாருடன் ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. அதன் பிறகு ரஜினியுடன் ‘சந்திரமுகி’, சூர்யாவுடன் ’கஜினி’, சிம்புவுடன் ’வல்லவன்’, அஜித் உடன் ’பில்லா’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நம்பர் 1 இடத்திற்கு வந்தார். சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதல் பின்பு முறிவு என பல்வேறு சர்ச்சைகளைக் கடந்த அவர், ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடிக்கும்போது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார். நீண்ட காலம் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் விக்கியைத் திருமணம் செய்து கொண்டு வாடகைத் தாய் மூலமாக இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார் நயன்.


