Skip to content

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்”-நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் ,தெலுங்கு மொழி படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் .தமிழில் இவர் நடித்த கில்லி படம் மாபெரும் வெற்றி பெற்றது . இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் முக்கியமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து  இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை ஏற்று நடிகர் பிரகாஷ்ராஜ் அமலாக்கத்துறை முன்பாக  ஆஜர் ஆனார். பின்னர் ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. இனி இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நான் கூறிய தகவல்களை பதிவு செய்து கொண்டனர். என்னை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!