Skip to content
Home » நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இதையடுத்து நேற்று அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரியது. இதையடுத்து, வரும் 28ம் தேதி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்தியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் பல உள் மற்றும் வெளி சக்திகள் நமது நாட்டை பலவீனப்படுத்த முயல்கின்றன. இந்த சக்திகளை கண்டறிந்து தோற்கடிக்க வேண்டும்.

டெல்லியில் உள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை எனது அரசு தொடங்கியது(இந்த ஆண்டு பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட புதிய திட்டம்). நான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கு ரூ. 1,000 கிடைக்குமா? என அவர்கள் சந்தேகம் கொள்ளக்கூடும். என் மீது நம்பிக்கை வைக்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். நான் விரைவில் வெளியே வருவேன்.

இந்த தருணத்தில், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னை கைது செய்திருப்பதால், நீங்கள் பாஜகவினரை வெறுக்காதீர்கள். அவர்களும் நமது சகோதரர்கள்தான்.” இவ்வாறு கேஜ்ரிவால் கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!