சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
