Skip to content
Home » இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி, திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் மாரியம்மாள் தலைமை வகித்தார்.
ஆர்பாட்டத்தின் போது பாலஸ்தீனம் மீது வெறி பிடித்த இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காசாவில் குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியோர்கள் மீது குறி வைத்து தாக்கி கொன்று குவிப்பதை கண்டித்தும் இஸ்ரேல், பாலஸ்தீனம் போரை உடனடியாக, முடிவுக்கு கொண்டு வந்து சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்க கோரியும், போர் வெறி பிடித்த ஏகாதிபத்தியத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!