Skip to content
Home » இந்திய பந்து வீச்சில் பாகிஸ்தான் சுருண்டது..

இந்திய பந்து வீச்சில் பாகிஸ்தான் சுருண்டது..

  • by Senthil

உலககோப்பையின் முக்கிய லீக் போட்டி இன்று குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.  பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50, ரிஸ்வான் -49 ரன்கள் எடுத்தனர். முதல் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான் கடைசி 36 ரன்கள் எடுக்குறதுகுள்ளாக 7 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. .. இந்த போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் குல்தீப், பாண்டியா, ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்..பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் பாபர் மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!