Skip to content
Home » அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… போலீஸ்காரர் உள்பட 20 பேர் காயம்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… போலீஸ்காரர் உள்பட 20 பேர் காயம்…

  • by Senthil

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 3ம் சுற்றின் முடிவில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார். மேலும், அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் அருண் குமார் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 12 மணி நிலவரப்படி காளைகள் முட்டியதில் ராஜ்கமல் என்ற போலீஸ்காரர், 17 வயது சிறுவன் ஒருவன் உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!