Skip to content
Home » திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு….பரபரப்பு தகவல்

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு….பரபரப்பு தகவல்

திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். இவர்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது. இன்று அதிகாலை இந்த சோதனை முடிவடைந்தது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, இது ஆண்டுதோறும் வழக்கமாக நடத்தப்படும் சோதனை தான். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சோதனை நடத்தப்படவில்லை. தற்போது, மீண்டும் சோதனை நடத்தப்படுகிறது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் யாரேனும் அதிக அளவு நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளனரா? என்பது குறித்து அறிய இந்த சோதனை நடைபெற்றது, என்றனர்.
20 மணி நேரம் நடந்த ஆய்வு முடிவில் அதிகாரிகள் சில ஆவணங்களை எடுத்துச்சென்றனர். இந்த சோதனையை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதுபோல திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் விடிய விடிய நடந்த ஐடி சோதனை இன்று காலை நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!