மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு குறைந்தபட்சமாக ரூ.2 லட்சம் வரை அபராதமும், அதிகபட்சமாக 9 மாதம் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
