Skip to content

ஜெய்ப்பூர்- சொகுசு கார் மோதி ஒருவர் பலி- 16 பேர் காயம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் பலியான நிலையில், 16 பேர் காயம் அடைந்தனர். ஜெய்ப்பூரில் சாலையோர உணவகங்களில் கூடியிருந்த மக்கள் மீது சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. சொகுசு கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் தொழிலதிபர் தினேஷ் ரின்வா என போலீசார் தகவல் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!