ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துணவு பணியாளரான மனைவியை பணியில் இருந்து நீக்கிய ஆத்திரத்தில், பழிவாங்கும் நோக்கில் ஆறுமுகம் (48) என்பவர் மாணவியை நீக்கிய ஆசிரியருக்கான சாம்பாரில் சாணி பவுடர் கலக்கச் செய்ததாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு உணவு பரிமாறும் முன் இது கண்டறியப்பட்டதால் 51 மாணவர்கள் அசம்பாவிதத்தில் இருந்து தப்பினர்.
ஈரோடு அருகே பள்ளி உணவில் சாணி பவுடர் கலந்தவர் கைது
