Skip to content
Home » கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

  • by Senthil

கரூர் அருகே டிஎன்பிஎல் காகித ஆலை ஸ்டோர் மேலாளர் வீட்டில் 115 பவுன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளனர். கரூர் மாவட்டம் வேலயுதம்பாளையம் பகுதியில் உள்ள டிஎன்பிஎல் காகித ஆலையில் ஸ்டோர் மேலாளராக அண்ணாதுரை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள ஆலை நிர்வாக அலுவலக குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

இவர் கடந்த 6ம் தேதி சென்னையில் மகள் படிப்பிற்காக குடும்பத்தோடு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து

அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 115 பவுன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அண்ணாதுரை வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட  கும்பலை தேடி வருகின்றனர்.திருட்டுப்போன   115 பவுன் தங்க நகையின் மொத்த மதிப்பு 17 லட்சத்து 63 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!