அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் செல்போன் டவர்களுக்கு கேபிள் வயர் பதிக்கும் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டிற்கு முன்பாக செல்போன் டவர் வேலைக்கு தேவையான காப்பர் வயர்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் இருப்பு வைத்துள்ளார் இந்நிலையில் கடந்த 27ம் தேதி பார்க்கும்போது வீட்டிற்கு முன்பாக வைத்திருந்த ஒரு லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் 26 ஆம் தேதி இரவு பெய்த
கனமழையின் போது மர்ம நபர்கள் காப்பர் வயர்களை எடுத்து டாட்டா ஏசி வாகனத்தில் திருடி சென்றது சிசிடிவி பதிவில் தெரியவந்துள்ளது இதனை ஆதாரமாக வைத்து காப்பர் வயர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே கொள்ளையர்கள் இதுபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.