Skip to content
Home » ஜெயங்கொண்டத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு… 6 மாதமாக வீணாகும் குடிநீர்…

ஜெயங்கொண்டத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு… 6 மாதமாக வீணாகும் குடிநீர்…

அரியலூர் மாவட்டம் தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஆண்டிமடம் பகுதிக்கு குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் ஜெயங்கொண்டம் அடுத்து சிலால் வால் பட்டறை பஸ் நிறுத்தம் எதிரே செல்லும் சாலை ஓரத்தில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சாலையில் ஓடி வீணாகிறது. இதனால் இதன் மூலம் குடிநீர் பெறக்கூடிய கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் முக்கிய அதிகாரிகள் இவ் வழியாக சென்று வந்தாலும்,

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய யாரும் முன் வரவில்லை. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரே திருப்பத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி சரி செய்தும் இதுவரை உடைப்பு சரி செய்யப்படவில்லை. இதனையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!