Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம.  இவர் அரசு தலைமை மருத்துவமனையில் (உடற்கூறு பிரிவில்) தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கலியமூர்த்தி இவர் லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலியமூர்த்தி வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காவேரியில் சடலம் ஒன்று மிதப்பதாக வழிய வந்தவர்கள் ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்து அங்கு சென்று சடலத்தை மீட்டு பார்த்தபோது. இறந்து போனது கலியமூர்த்தி என்பது உறுதி செய்யப்பட்டது.இதை அடுத்து போலீசார் இறந்து போன கலியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் எதற்காக? அங்கு சென்றார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!