Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாநத்தம் காலனித் தெருவை சேர்ந்த சங்கர் மகன் ஜெகன்குமார் (22) இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபாவளிக்கு தனது சொந்த ஊருக்கு வந்து, வீட்டில் இருந்து வந்தார்.  இந்நிலையில் தனது வீட்டில் நடந்து சென்ற போது, எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்சார ஒயரை ஜெகன்குமார் மிதித்ததாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!