Skip to content
Home » சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது….

சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முத்துசேர்வார்மடம் காலனி தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் இவர் தனது குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்த 17 வயது ஒரு சிறுமியை காதலிப்பதாக அந்த சிறுமியிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது தாயாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயார் ஸ்டாலினின் தாயை சந்தித்து அவரது மகனை கண்டிக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை இடையில் வழிமறித்த ஸ்டாலின் காதலிக்க வற்புறுத்தி மிரட்டியுள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, வழக்கு பதிந்து ஸ்டாலினை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!