Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதி பெண் பலி….

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதி பெண் பலி….

அரியலூர் மாவட்டம்,  உடையார்பாளையம் அருகே கட்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி குமரி (40). இவர் சாலையின் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்கு கடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அவ்வழியே சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் குமரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன குமரியின் உடலை மீட்டு பிரேத

பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை கட்சிப்பெருமாள் சாலை அருகாமையிலேயே ரேஷன் கடைகள் மேலும் இலையூர் வாரியங்காவல் செல்லும் பாதை இருப்பதால் பெரும்பாலானோர் சாலையை கடந்து செல்ல வேண்டிய சூழல் இருப்பதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

எனவே அந்த இடத்தில் பேரிகார்டு அமைத்து விபத்தை தடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இது போன்ற உயிரிழப்பு விபத்துக்கள் இதே ஊரில் பல முறை தொடர்ந்து நடந்தும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை‌ என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே விபத்தை தவிர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!