Skip to content
Home » கோவை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளையடித்தவன் கைது

கோவை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளையடித்தவன் கைது

கோவை நூறடி சாலையில் உள்ள  ஜோஸ்  ஆலுக்காஸ்  நகைக்கடையில், ஏ.சி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர், கடையில் இருந்த 200 பவுன் தங்கம், வைரம், பிளாட்டினம்  நகைகளை  கொள்ளை அடித்துச் சென்ற சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தபோது ஏசி வென்டிலேட்டர் வழியாக நுழைந்த ஒரே ஒரு நபர் நகைகளை கொள்ளையடித்து விட்டு அவற்றை  தனது பையில் எடுத்துக்கொண்டு அந்த பையை தோளில் போட்டவாறு சாலையில் நடந்து சென்றார். பின்னர் அவர் உக்கடம் பஸ் நிலையம் வந்து பஸ்சில் பொள்ளாச்சி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பேரில் அந்த நபரை  போலீசார் தேடிவந்தனர்.  இன்று அவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது.  அவர் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜயகுமார் என தெரியவந்தது. இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் சிறிது காலம் தங்கி இருந்தார். அப்போது அவர் கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நககைக்கடையை கண்காணித்து கொள்ளையில் ஈடுபட்டது  தெரியவந்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!