Skip to content
Home » கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எனவே ஹரிபத்மன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கலாஷேத்ரா விவகாரம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரித்த மகளிர் ஆணைய அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கையை மூடப்பட்டு முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து தருமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் சாட்சியாக உள்ள மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் பெயரை வெளியிட விரும்பாத 7 மாணவிகள் தொடர்ந்த இந்த வழக்கில் பதில்தர, மத்திய அரசு மற்றும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!